கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.*** தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;*** பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;*** நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.***

அனுதின மன்னா


“ மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,
 தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினாலும் பிறப்பான் “   - மத்தேயு 4 : 4

என்று வேதத்தில் தெளிவாக நம் தேவன் குறிப்பிட்டு இருக்கிறார். 

நாமும் தினந்தோரும் வேதத்தில் உள்ள பகுதியை படித்து, தியானித்து, தேவனின் வல்லமை மிகுந்த வார்த்தை என்ற மன்னாவை உணவாக உட்கொண்டு, இருதயத்தினில் செலுத்தி, அதன் படி நடந்து, கீழ்ப்படிந்து பரலோகப் பாதையில் செல்வோமாக.

தேவனுக்கே மகிமை உண்டாவதாக. அல்லேலூயா.